Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (16:59 IST)
கடந்த 2013-ஆம் ஆண்டில், தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை கொலை செய்த தென்னாப்பிரிக்க ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு, ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


 

 
தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்கார் பிஸ்டோரியஸ் உடனடியாக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அரசு மற்றும் பிஸ்டோரியஸ் ஆகிய இரு தரப்பும் மேல்முறையீடு செய்யலாம்.
 
கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 29 வயதான பிஸ்டோரியஸ் தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை தாழ்ப்பாளிட்டிருந்த ஒரு கழிப்பறையில் நான்கு முறை சுட்டார். ரீவா ஸ்டீன்காம்பை தான் சுட்டதை ஒப்புக்கொண்ட பிஸ்டோரியஸ், அச்சத்தின் விளைவாகவும், யாரோ திருடன் என்று எண்ணி தவறுதலாகவும் தனது காதலியை சுட்டுவிட்டதாக தெரிவித்தார்.


 

 
இந்த வழக்கில் குறைந்தது 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை பிஸ்டோரியஸ் எதிர்நோக்கியிருந்த வேளையில், இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தோக்கோஜிலி மசிபா, புனர்வாழ்வு மற்றும் குற்றத்துக்கு வருத்தம் தெரிவித்தல் ஆகிய தனிமைப்படுத்தும் சூழல்கள், கொலை குற்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட 15 ஆண்டுகள் என்ற நிலையிலிருந்து மாறி குறைந்த தண்டனை வழங்கக் காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments