Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமர் இதயத்தில் இவ்வளவு வெறுப்பு இருந்தது எனக்கு தெரியாது: தந்தை சித்திக்

Webdunia
திங்கள், 13 ஜூன் 2016 (17:51 IST)
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், ஒரு பாலுறவுக்காரர்கள் கேளிக்கையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 50 பேரை கொன்ற ஒமர் மடீனின் தந்தை, தன்னுடைய மகனுடைய இதயத்தில் இவ்வளவு வெறுப்பு இருந்தது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
 

 
நவீன அமெரிக்க வரலாற்றில், இப்படி ஒரு மோசமான துப்பாக்கிச்சூட்டை நடத்த ஒமர் மடீனை எது தூண்டியது என்பது குறித்து தன்னால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை என ஆப்கனில் பிறந்த ஒமர் மடீனின் தந்தை மிர் சித்திக் தெரிவித்துள்ளார்.
 

 
மேலும், ஆப்கன் மக்களுக்கு சித்திக் அனுப்பிய வீடியோ செய்தியொன்றில், அமெரிக்க பிரஜையான தனது மகன் ஒமர் திருமணம் முடித்து குழந்தை பெற்றெடுத்தற்கு முன் நல்ல பிள்ளையாக இருந்தாகக் கூறியுள்ளார்.
 

 
ஒமர் மடீன் நிலையற்ற மனநிலைகாரர், வன்முறையில் ஈடுபடக்கூடியவர் என்றும் ஆனால் அவர் மதத் தீவிரவாதி என்பது குறித்து தான் அறிந்திருக்கவில்லை என்றும் மடீனின் முன்னாள் மனைவி வர்ணித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments