Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணத்தை வீதியில் வீசி கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன திருட்டி தாத்தா!

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (16:47 IST)
தாடி வைத்த இந்த வெள்ளை முதியவர் இரண்டு தினங்களுக்கு முன்பு வங்கியில் கொள்ளை அடித்தார். 
 
பின் அந்த பணத்தை உற்சாகமாக வீதியில் தூக்கி எறிந்து அங்கு சென்று கொண்டிருந்த மக்களுக்கு உற்சாகமாகக் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
 
அமெரிக்காவின் கொலொராடோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வயதான ஒரு வெள்ளை முதியவர் கொலொராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள அகாடெமி வங்கியைத் திங்கட்கிழமை மதியம் கொள்ளையடித்தார் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், "வங்கியைக் கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்து, அந்த பணத்தை வீசி எறிந்தார்," என்று கூறுகின்றார். "பணத்தை எல்லா திசைகளிலும் தூக்கி எறிந்து கொண்டே கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவித்தார்," என்று மேலும் கூறினார்.
 
பின் அந்த பகுதியிலிருந்த ஸ்டார்பக்ஸ் காஃபி கடை அருகே கைது செய்யப்படுவதற்காகக் இந்த முதியவர் காத்திருந்தார். இந்த செயலில் ஈடுபட்டவர் 65 வயதான டேவின் வெயின் ஆலிவர் என கூறுகிறது கொலொராடோ ஸ்பிரிங்ஸ் காவல்துறை.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments