Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்வாணமாக இருக்க 'உரிமை' என்ற நபருக்கு நேர்ந்த கதி

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2014 (19:37 IST)
தனக்கு நிர்வாணமாக நடந்து திரிய உரிமை உண்டு என்று வாதாடி, பல முறை அது போலத் திரிந்து, தடுத்து வைக்கப்பட்டு, பல ஆண்டுக்காலம் சிறைகளில் கழித்த பிரித்தானியர் ஒருவர் கொண்டுவந்த வழக்கை ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம்
 
ஸ்டீபன் கோவ் என்ற இவர், பொது இடங்களில் நிர்வாணமாகத் திரிந்ததற்காக கடந்த 11 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். சில முறை அவர் சிறையில் இருந்து வெளியேறிய உடனேயே மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
 
தனது கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க இது போன்ற கடுமையான ஒடுக்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் புகார் செய்தார்.
 
நீதிமன்றம், இது போன்ற ஒரு சிறிய குற்றத்துக்காக அவர் அனுபவிக்க நேர்ந்த சிறைத் தண்டனைக் காலம் குறித்துக் கவலைப்பட்டது. ஆனால் அவர் மற்றவர்கள் மனத்தைப் புண்படுத்தும் வகையில் நடந்துகொண்டு சட்டத்தையும் மீறுகிறார் என்பதை அவர் தெரிந்தே வைத்திருந்தார் என்று அது கூறியது.
 

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

மனைவியை அபகரித்து சொத்தையும் கேட்ட கட்சி தலைவர்! ஆள் வைத்து கதை முடித்த காங். பிரமுகர்!

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?