Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்புக் காவலில் நோவாக் ஜோக்கோவிச்

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (00:08 IST)

டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச் ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கான விசா இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்ட பின்னர் அவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

திங்களன்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவாக் ஜோக்கோவிச் விளையாடுவாரா, நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவாரா என்று ஞாயிறன்று நீதிமன்றம் முடிவு செய்யும்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாததால் அவருடைய விசா முதலில் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் மூலம் அவர் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி பெற்றார்.

எனினும் இரண்டாவது முறையாகவும் அவரது விசா ரத்து செய்யப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அவர் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று அதற்கு ஆஸ்திரேலிய அரசு காரணம் கூறியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments