Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவிடம் 2 மில்லியன் டாலர்கள் கேட்கும் வட கொரியா

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (08:52 IST)

நீண்ட காலம் கோமாவில் இருந்து பின்னர் உயிரிழந்த அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியரின் மருத்துவ செலவுகளுக்கு அமெரிக்காவிடம், வட கொரியா இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2015ஆம் ஆண்டு டிசம்பரில் சுற்றுலாவிற்காக சென்ற வார்ம்பியர், வட கொரியாவில் சிறையில் அடைக்கப்பட்டார். 17 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டு கோமா நிலையில் அமெரிக்கா திரும்பிய அவர் அங்கு உயிரிழந்தார்.

வார்ம்பியரை அவரது நாட்டிற்கு அனுப்பும் முன்னரே அவரின் மருத்துவ செலவுகளை அமெரிக்கா ஏற்க வேண்டும் என்று, வட கொரியா கேட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments