Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண் பெண் ஊதிய முரண்பாடுகள் தவறு-போப் பிரான்சிஸ்

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2015 (10:52 IST)
ஒரே பணியை செய்யும் ஆடவர் மற்றும் மகளிர், ஒரே அளவு ஊதியம் பெற வேண்டும் என்பதை போப் பிரான்சிஸ் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
 
அவ்வகையில் பணி ஒன்றாக இருக்கும்போது ஊதியங்கள் வித்தியாசமாக இருப்பது, ஒரு பெரிய ஊழல் என்றும் அதை கிறிஸ்தவர்கள் எதிர்க்க வேண்டும் என்றும், ரோமிலுள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஆற்றிய ஒரு உரையில் போப் கூறியுள்ளார்.
 
ஆடவருக்கு உரிய அனைத்து உரிமைகளும் மகளிருக்கும் உள்ளன என்று இருக்கும்போது, ஊதிய விஷயத்தில் அவர்களிடையே இடைவெளி இருக்க வேண்டிய காரணம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
பெண்களை வெளியே சென்று வேலை பார்க்க வேண்டாம் எனத் தடுக்கும் ஆடவர்களையும் கடுமையாக சாடியுள்ள போப் பிரான்சிஸ், அப்படியானவர்கள் ஒரு வகையான ஆணாதிக்க சிந்தனையில் உள்ளவர்கள் எனக் கூறியுள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments