Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் கானுக்கு இடைக்கால பிணை கிடைத்தது

Webdunia
புதன், 6 மே 2015 (19:42 IST)
நடிகர் சல்மான் கானுக்கு இரண்டு நாட்கள் இடைக்கால பிணை வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
இதையடுத்து சல்மான் கான் இப்போதைக்கு சிறையில் தங்க வேண்டிய சூழல் ஏற்படவில்லை.
 
மும்பை அமர்வு நீதிமன்றம், சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று மதியம் தீர்ப்பளித்தாலும், தீர்ப்பு குறித்து முழுமையான ஆவணங்கள் தமக்கு அளிக்கப்படாத சூழலில், அவரை சிறையில் அடைப்பது தவறு என அவரது வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உயர்நீதிமன்றத்தில் வாதாடினார்.
 
இதையடுத்து அவருக்கு இரண்டு நாள் இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக இன்று மதியம் 2002 ஆம் ஆண்டில் மும்பையில் நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் அவருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கியுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments