Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் - யுக்ரேன் அரசு

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (17:44 IST)
யுக்ரேனில் கடந்த நான்கு நாட்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக கீயவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இது சம்பந்தமாக முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சுமார் 5,300 ரஷ்ய படைவீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 191 டாங்கிகள், 29 போர் விமானங்கள், 29 ஹெலிகாப்டர்கள் மற்றும் 816 ராணுவ கவச வாகனங்கள் யுக்ரேனிய படைகளால் அழிக்கப்பட்டதாக யுக்ரேனிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், இந்தக்கூற்று பிபிசியால் உறுதி செய்யப்படவில்லை. அதேசமயம், படையெடுப்பின் ஆரம்ப கட்டங்களில் ரஷ்யா "கடுமையான" உயிரிழப்புகளை சந்தித்ததாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் நம்புகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, யுக்ரேனிய படையெடுப்பின்போது தங்கள் நாட்டு வீரர்கள் கொல்லப்பட்ட தகவலை ரஷ்ய பாதுகாப்புத்துறை கூறியது. ஆனால், எத்தனை பேர் இறந்தனர் என்ற கணக்கை அதன் அதிகாரிகள் வெளியிடவில்லை

முதல்நாள் நடந்த ரஷ்ய யுக்ரேனிய படையெடுப்பில், குறைந்தது 94 பொதுமக்கள் இறந்ததை உறுதிப்படுத்தியதாகவும், ரஷ்ய படையெடுப்பால் "கடுமையான மனிதாபிமான விளைவுகள்" தூண்டப்பட்டுள்ளதாகவும் உயிரிழப்புகள் கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்றும் ஐ.நா பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அண்ணா பல்கலை உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்..!

18 வயதிற்குள் 50 முறை வன்கொடுமை! ஆசிரமத்தில் நடந்த அக்கிரமம்! - இந்தியா வந்து இங்கிலாந்து பெண்ணுக்கு நடந்த சோகம்!

ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய்.. தாசில்தார் வழங்கிய வருமான சான்றிதழ்..!

சீமானால் எங்கள் வாழ்க்கையை இழந்துட்டோம்.. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி குமுறல்..!

நாளை கிராம சபை கூட்டம்: மக்கள் நீதி மய்யம் முக்கிய அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments