Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொய் கூறியதால் பட்டத்தைப் பறிகொடுத்த அழகி

Webdunia
சனி, 30 ஆகஸ்ட் 2014 (02:08 IST)
ஆசிய பசிபிக் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஒருவர் தனது அழகிப் பட்டத்தை பறிகொடுத்துள்ளார்.

மரியாதையற்ற முறையிலும் நேர்மையற்ற முறையிலும் நடந்துகொண்டுள்ளதாக குற்றம் சாட்டியே அவரது அழகிப் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.
 
அழகி கிரீடத்துடனும் அவருக்கு அளிக்கப்பட்ட மார்பக உள்ளீடுகளுடனும் (breast implants) அவர் காணாமல்போயிருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
 
மியன்மாரிலிருந்து முதல் பெண்ணாக, 18 வயதான மே மியட் நோ கடந்த ஆண்டு அழகிப் போட்டியில் வெற்றிபெற்றிருந்தார்.
 
ஒரு லட்சம் டாலர்கள் பெறுமதியான கிரீடம் ஒன்றும் பத்தாயிரம் டாலர்கள் செலவில் மார்பக உள்ளீடுகளும் அவருக்கு வழங்கப்பட்டதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
 
பொய் கூறியதன் மூலம், அழகி ஒருவருக்கான ஆளுமையையும் நாணயத்தையும் அவர் இழந்துவிட்டதாக கடந்தவாரம் அவருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் காணாமல்போய்விட்டதாக அழகிப் போட்டி ஏற்பாட்டுக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments