Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியா: ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதா? - 3 வாரங்களாக கொரோனா உயிரிழப்புகள் ஏதுமில்லை

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (22:30 IST)

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 3 வாரங்களாக அங்கு கொவிட் 19 நோயுடன் தொடர்புள்ள உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.

இத்தகவலை மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8,668 ஆகும். இவர்களில் இதுவரை 8,476 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 121ஆக நீடிக்கிறது.

"தற்போது 71 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இரண்டு நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

"கடந்த 22 நாட்களாக கோவிட்19 நோய்த்தாக்கம் உள்ள எவரும் உயிரிழக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்றை மலேசியாவும் வெற்றிகரமாக சமாளித்துள்ளது," என்று நிர்வாகத் தலைநகரான புத்ரா ஜெயாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் அகன்றுவிட்டதாகக் கருதப்பட்ட நாடுகளில் அதன் தாக்கம் மீண்டும் ஏற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய நிலை மலேசியாவில் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமானால், அரசாங்கம் அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது மிக அவசியம் என்றார்.

மலேசியாவில் அண்மைய சில தினங்களாக புதிய கொவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே பதிவாகி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 97.8 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments