Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபான உற்பத்தியாளர்கள் மீதான புதிய வரிக்கு நீதிமன்றம் தடை

Webdunia
வியாழன், 26 மார்ச் 2015 (10:36 IST)
இலங்கையில் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மாதாந்தம் 200 மில்லியன் ரூபாவை வரியாக செலுத்த வேண்டுமென்று வரவுசெலவுத் திட்டத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் சில தாக்கல் செய்திருந்த மனுவொன்றை ஆராய்ந்ததன் பின்னரே தலைமை நீதியரசர் உள்ளிட்ட நீதிபதிகள் இந்த தடையுத்தரவை பிறப்பித்தனர்.
 
இவ்வாறான உத்தரவை பிறப்பிப்பதற்கு நிதியமைச்சருக்கு அதிகாரங்கள் இல்லை என்று மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.
 
மனுவை தள்ளுப்படி செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்த அரசதரப்பு வழக்கறிஞர், இது வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தினால அங்கீகரிக்கப்பட்ட ஒரு வரி என்று சுட்டிக்காட்டினார்.
 
எனவே, இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் விவாதிக்க முடியாது என்றும் அரசதரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
 
ஆனால் அரசாங்கத் தரப்பின் ஆட்சேபனையை நிராகரித்த நீதிபதிகள், மனுவை முன்கொண்டு விசாரணை செய்வதற்கு அனுமதியளித்தனர்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments