Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே பி வழக்கு: இந்தியாவின் ஒத்துழைப்பை பெற நீதிமன்றம் அறிவுறுத்தல்

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2016 (16:49 IST)
விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதன் சம்பந்தமாக மேற்கொள்ளப் பட்டுவரும் விசாரணைகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெறுமாறு இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

]

 

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போதே இந்த அறிவுறுத்தல் அரசின் தலைமை வழக்கறிஞருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குக்கு இந்தியப் போலீசாரின் உதவி அவசியமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
 
இந்த வேண்டுகோள் தமது தரப்பால் முன்வைக்கப்பட்டது என ஜே வி பியின் வழக்கறிஞர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்தியக் காவல்துறையின் ஒத்துழைப்பை பெற்று வழக்கை விரைவாக முன்னெடுக்குமாறு மனுதாரர் சார்பில் கோரப்பட்டது.
 
அவர் விடுதலைப் புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்தாரா என்பது குறித்த விசாரணைகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அரச தரப்பு இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments