Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் ஹாசன்: "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்"

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (21:47 IST)
கமல் ஹாசன்: "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்"
படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே இந்தியன் - 2 படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என லைக்கா நிறுவனத்துக்கு நடிகர் கமல் ஹாசன் கடிதம் எழுதியுள்ளார் என்கிறது தினமணியின் செய்தி.
 
"நம்முடன் சாப்பிட்டபடி, பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் பணியாற்றிய அவர்களின் மகிழ்ச்சி நீடித்திருக்கப் போவதில்லை என்பதும் அவர்கள் திரும்ப வரப்போவதில்லை என்கிற யதார்த்தத்தையும் உணரும்போது மிகுந்த வேதனையாக இருக்கிறது."
 
"அந்த விபத்து நடந்தபோது சிலமீட்டர் தூரத்தில் சில நொடிகளில் அந்தக் கோர விபத்திலிருந்து நான் தப்பித்தேன். அந்தச் சம்பவம் ஆழ்ந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது," என்று கமல் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், "இனிவரும் காலங்களில் படப்பிடிப்பு தளங்களில் பாதுகாப்புக்கான அனைத்து உத்தரவாதங்களையும், வழிகாட்டுதல்களையும் நீங்கள் கடைபிடிக்க வேண்டும். நீங்கள் எடுக்கப்போகும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள், அதை விடாமல் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக கடைப்பிடிப்பதும் படப்பிடிப்புக் குழுவினரின் (என்னையும் சேர்த்து) இழந்த தன்னம்பிக்கையை மீட்டெடுத்து மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க வைக்கும் என்று கமல் தெரிவித்துள்ளார்" என விவரிக்கிறது அச்செய்தி.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments