Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடல் நீருக்குள் ராணுவ டாங்கிகள்: மெய்சிலிர்க்க வைக்கும் அருங்காட்சியகம்!

Webdunia
சனி, 27 ஜூலை 2019 (12:28 IST)
ஆக்குபா கடற்கரையில் அமைந்துள்ள முதலாவது நீருக்குள் இருக்கும் ராணுவ அருங்காட்சியகத்தை ஜோர்டான் திறந்துள்ளது.
 
புதன்கிழமை நடைபெற்ற இந்த திறப்பு விழாவில், டாங்கிகள், படை துருப்புகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உள்பட நீரில் மூழ்கிய பல ராணுவ வாகனங்களை ஜோர்டான் அரசு இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற செய்துள்ளது.
செங்கடலில் உள்ள பவள பாறைகளில் போர் புரிவது போன்ற வடிவமைப்பில் இந்த வாகனங்கள் உள்ளன. இங்கு சுற்றுலா வருவோருக்கு புதுவித அருங்காட்சியக அனுபவத்தை இந்த காட்சிப்படுத்தல் வழங்குகிறது என்று உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.
 
விளையாட்டு, சுற்றுச்சூழல் மற்றும் கண்காட்சி பொருட்களை இதில் சேர்க்க போவதாக ஆக்குபா சிறப்பு பொருளாதார மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments