Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திட்டமிட்டபடி 11 கைதிகளுக்கு மரண தண்டனை: இந்தோனேசியா

Webdunia
செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (20:53 IST)
சர்வதேச அழுத்தத்தின் மத்தியிலும் பதினொரு கைதிகளின் மரணதண்டனை திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கும் தமது நாட்டின் உரிமையில் எவரும் தலையிடக் முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
துப்பாக்கிச் சூட்டு அணியினரால் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளவர்களுள் ஆஸ்திரேலியா, பிரேசில், மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகளும் அடங்குவர். பெரும்பாலும் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய அதிபர் வெளிநாட்டுத் தலைவர்களின் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்.
 
குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கும் வகையில் கருணை மனு அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என அதிபர் ஏற்கனவே தீர்மானித்ததுள்ளார். அறிவிக்கப்பட்ட மரண தண்டனையில் காலதாமதம் ஏற்படாது என்று இந்தோனேசியா அறிவித்துள்ளது.
 
ஏதிர்வரும் நாட்களில் நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனையை தடுக்கும் வகையில் ஆஸ்திரேலியப் பிரஜைகள் இருவராலும் மேற்கொள்ளப்பட்ட இறுதி சட்டபூர்வ வழிமுறைகளையும் இந்தோனேசிய நீதிமன்றம் ஒன்று மறுத்துவிட்டது. மரண தண்டனையை எதிர்கொண்டிருப்பவர்களில் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மயூரன் சுகுமாரனும் அடங்குவார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments