Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவர்களைக் கொலை செய்ததாக 67 வயதுப் பெண் மீது சந்தேகம்

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2014 (13:32 IST)
ஜப்பானில் தம் கணவன்மாரையும் சேர்ந்து வாழ்ந்து வந்தவர்களையும் தொடர்ச்சியாக கொலை செய்து வந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் 67 வயது பெண் ஒருவரின் வீட்டைக் காவல் துறையினர் சோதனையிட்டுள்ளனர்.
 
தம் புதிய கணவனுக்கு நஞ்சு வைப்பதற்காக சயனைட்டைப் பயன்படுத்தியுள்ளதாகச் சந்தேகம் வெளியானதை அடுத்தே, சிஸாகோ காகேஹி (Chisako Kakehi) என்ற இந்தப் பெண்ணை புதன்கிழமை (2014 நவம்பர் 19) காவல் துறையினர் கைது செய்தனர்.
 
2012ஆம் ஆண்டில் காகேஹியுடன் கொஞ்சம் காலம் வாழ்ந்த பின்னர் உயிரிழந்த இஸாவோவின் உடலில் சயனைட் கலந்திருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்தப் பெண்ணைத் திருமணம் புரிந்தவர்கள், சேர்ந்து வாழ்ந்தவர்கள் என மேலும் நான்கு ஆண்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
 
இவ்வாறு உயிரிழந்தவர்களிடமிருந்து சுமார் எட்டு லட்சம் டாலர்கள் பெறுமதியான சொத்துகளை இந்தப் பெண், சொத்துரிமை அடிப்படையில் பெற்றுள்ளார்.
 
தம் கணவன்மாரையும் சேர்ந்து வாழ்ந்தவர்களையும் கொலை செய்த குற்றச்சாட்டை, சிஸாகோ காகேஹி மறுத்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments