Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலத்தீன சுரங்கங்களை அழிக்க இஸ்ரேல் உறுதி

பாலத்தீன சுரங்கங்களை அழிக்க இஸ்ரேல் உறுதி
, வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (07:20 IST)
காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவ, பாலத்தீனத் தீவிரவாதிகள் கட்டிய சுரங்கப் பாதைகளை, போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும், இஸ்ரேல் அழிக்க உறுதியுடன் இருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பின்யாமின் நேடன்யாகு கூறியிருக்கிறார்.



இந்த வேலையை முடிக்க இஸ்ரேலை அனுமதிக்காத எந்த ஒரு போர் நிறுத்தத் திட்டத்தையும் தான் ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார்.
 
இந்த வேலையை முடிக்க இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்று காசாவில் இருக்கும் இஸ்ரேலியப் படைகளின் தளபதி கூறியிருக்கிறார்.
 
இதனிடையே, காசாவில் இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களும், இஸ்ரேலியப் பகுதிகளுக்குள் ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களும் தொடர்கின்றன.
 
நான்காவது வாரமாக நடந்து வரும் இந்த இஸ்ரேலிய ராணுவத் தாக்குதல் குறித்து சர்வதேச கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன. உயிர்ச்சேதங்கள் அதிகரித்து வருகின்றன.
 
காசாவில் 1,300க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலோனோர் சாதாரண பொதுமக்கள் என்றும் காசா அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
இஸ்ரேலைப் பொறுத்த மட்டில் 56 இஸ்ரேலியப் படையினரும் மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil