Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளாரா?

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (15:15 IST)
டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை சந்தித்துவிட்டு வந்த பிறகு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது ஆம் ஆத்மி கட்சி தமது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
 
இதனை டெல்லி போலீஸ் மறுத்துள்ளது. "பாஜகவின் டெல்லி போலீஸ் அரவிந்த் கேஜ்ரிவாலை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது. அவர் நேற்று சிங்கு எல்லைப் பகுதியில் விவசாயிகளை சந்தித்துவிட்டு வந்ததில் இருந்து (அரவிந்த் கேஜ்ரிவால்) வீட்டில் இருந்து வெளியேறவோ, வீட்டுக்குள் நுழையவோ யாரும் அனுமதிக்கப்படவில்லை" என்று அந்த ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
அந்த ட்வீட்டுக்கு டெல்லி வடக்கு துணை போலீஸ் ஆணையரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் பதில் அளித்துள்ளது. அதில் "டெல்லி முதல்வர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறும் இந்தக் கூற்று தவறானது. மண்ணின் சட்டத்துக்கு உட்பட்டு நடமாடும் உரிமையை அவர் செயல்படுத்தி வருகிறார். வீட்டின் முகப்பைக் காட்டும் படம் எல்லாவற்றையும் கூறுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கூடவே அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டின் முகப்பைக் காட்டும் படம் ஒன்றையும் அதில் பகிர்ந்துள்ளார்கள். 'சட்டத்துக்கு உட்பட்டு நடமாடும் உரிமையை அவர் செயல்படுத்தி வருகிறார்' என்றால் அதன் பொருள் என்ன? இதில் போலீஸ் ஏதேனும் நுட்பமாக சொல்ல வருகிறதா? என்று தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments