Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளாரா?

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (15:15 IST)
டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை சந்தித்துவிட்டு வந்த பிறகு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது ஆம் ஆத்மி கட்சி தமது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
 
இதனை டெல்லி போலீஸ் மறுத்துள்ளது. "பாஜகவின் டெல்லி போலீஸ் அரவிந்த் கேஜ்ரிவாலை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது. அவர் நேற்று சிங்கு எல்லைப் பகுதியில் விவசாயிகளை சந்தித்துவிட்டு வந்ததில் இருந்து (அரவிந்த் கேஜ்ரிவால்) வீட்டில் இருந்து வெளியேறவோ, வீட்டுக்குள் நுழையவோ யாரும் அனுமதிக்கப்படவில்லை" என்று அந்த ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
அந்த ட்வீட்டுக்கு டெல்லி வடக்கு துணை போலீஸ் ஆணையரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் பதில் அளித்துள்ளது. அதில் "டெல்லி முதல்வர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறும் இந்தக் கூற்று தவறானது. மண்ணின் சட்டத்துக்கு உட்பட்டு நடமாடும் உரிமையை அவர் செயல்படுத்தி வருகிறார். வீட்டின் முகப்பைக் காட்டும் படம் எல்லாவற்றையும் கூறுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கூடவே அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டின் முகப்பைக் காட்டும் படம் ஒன்றையும் அதில் பகிர்ந்துள்ளார்கள். 'சட்டத்துக்கு உட்பட்டு நடமாடும் உரிமையை அவர் செயல்படுத்தி வருகிறார்' என்றால் அதன் பொருள் என்ன? இதில் போலீஸ் ஏதேனும் நுட்பமாக சொல்ல வருகிறதா? என்று தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

ஆன்லைன் விளையாட்டில் தமிழக அரசின் விதிமுறைகள்: விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments