Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை ரூபாயில் கடனுதவி வழங்க இணக்கம் தெரிவித்த இந்தியா

Webdunia
புதன், 25 மே 2022 (23:53 IST)
இலங்கைக்கு மருந்து கொள்வனவிற்காக வழங்கப்பட்ட கடனுதவியை இலங்கை ரூபாயில் செலுத்த இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
 
இரு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை அடுத்து, இந்த கடனுதவியை இலங்கை ரூபாவில் செலுத்த இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கான குறுங்கால மற்றும் மத்திய கால தீர்வுகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (மே 25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
 
இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்கு காணப்படும் டாலர் தட்டுப்பாடு காரணமாக, அந்த தொகையை இலங்கை ரூபாவில் செலுத்த இந்தியாவுடனான கலந்துரையாடலில் இணக்கம் எட்டப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments