Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாம்பியாவில் சிறுத்தை, சிங்கம் வேட்டைக்கு அனுமதி

Webdunia
வியாழன், 21 மே 2015 (09:24 IST)
சிங்கம், சிறுத்தை போன்ற மிருகங்களை வேட்டையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடையை ஜாம்பியா விலக்கியுள்ளது.
 


இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் தடை கொண்டுவரப்பட்டது.
 
இதையடுத்து சிறுத்தைகளை வேட்டையாடும் நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் தொடங்கும் என ஜாம்பியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ழான் கபாட்டா தெரிவித்துள்ளார்.
 
தற்போது நாட்டில் 8000 சிறுத்தைகளும், 4000 சிங்கங்களும் இருப்பது வான்வழியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்புகள் காட்டுகின்றன என ழான் கப்பாட்டா அம்மையார் கூறுகிறார்.
 
மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி
 
எனினும் தங்களின் குடும்பங்களால் கைவிடப்பட்ட வயதான ஆண் மிருகங்களை மட்டுமே வேட்டையாடுபவர்கள் கொல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
குறைந்துவரும் வனவிலங்குகளின் எண்ணிக்கை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்தே இந்த மிருகங்கள் வேட்டையாடுவதற்கு முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்தது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments