Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம், வெள்ளி எவ்வளவு தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (12:25 IST)
தமிழகத்தில் இதுவரை ரூ.105.72 கோடி, 803 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக இதுவரை ரூ.105.72 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.227.45 கோடி மதிப்புள்ள 803 கிலோ தங்கம், 478 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 5-ந் தேதி மட்டும் கோவையில் 149 கிலோ தங்கம் பிடிபட்டது. தூத்துக்குடியில் ரூ.37 லட்சம், தர்மபுரியில் ரூ.1.5 கோடி பிடிபட்டுள்ளது.
 
அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்ததாக 3,246 வழக்குகளும், பணம், பரிசு பொருள் வழங்கியதாக 302 வழக்குகளும், தேர்தல் விதிமீறல் குற்றத்துக்காக 291 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் தேர்தல் நடவடிக்கை தொடர்பாக 3,839 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையிலும் வழக்குகள் பதிவாகியுள்ளன"  என்று அந்த செய்தியில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments