Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடாவில் கல்வி கற்க செல்லும் இந்திய மாணவர்களின் கனவு சிதைவது எப்படி?

Sinoj
செவ்வாய், 19 மார்ச் 2024 (23:16 IST)
கனடாவில் உயர் கல்வி பயிலும் பல இந்திய மாணவர்கள் படித்து முடித்த பின்னர் வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள் அதேநேரம், பல இளைஞர்கள் போலி முகவர்கள் மற்றும் சில தனியார் கல்வி நிறுவனங்களின் வலையில் சிக்கிக்கொள்கின்றனர்.
 
பஞ்சாபிலிருந்து கனடாவுக்கு செல்ல சுமார் 19 லட்சம் ரூபாயை சஹஜ்பிரீத் சிங் செலவு செய்துள்ளார். ஆனால், கடந்த நான்கு மாதங்களில் ஒருமுறை கூட அவர் கல்லூரிக்கு சென்றதில்லை.
 
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2023 இல் கனடாவிற்கு வந்த சர்வதேச மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள். மூன்றாவது இடத்தில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மாணவர்களும் நான்காம் இடத்தில் நைஜீரியாவை சேர்ந்தவர்களும் உள்ளனர்.
 
ஆனால் கடந்த ஓராண்டில் நேபாளத்தில் இருந்து கனடாவுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது.
 
இந்நிலையில் இங்கு வரும் பல மாணவர்களும் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments