உயர் ரத்த அழுத்தம் பணக்காரர்களுக்கு மட்டுமான குறைபாடா?

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (18:23 IST)
ஏறக்குறைய 20 மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட ஒரு மிகப் பெரிய சர்வதேச ஆய்வு, உயர் ரத்த அழுத்தம் என்ற உடல் சார்ந்த குறைபாட்டை இனி பணக்கார நாடுகளுக்கு மட்டுமே தொடர்புடையதாகக் கருத முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.


 

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, சீனா, தெற்கு ஆசியா மற்றும் சஹாரா பாலைவனத்திற்கு தெற்கே உள்ள நாடுகள் ஆகியவற்றில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள வேளையில், ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட உயர் வருவாய் நாடுகளில் உயர் இரத்த அழுத்த குறைபாடு சரிந்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

குழந்தை பருவத்தில் எடுத்துக் கொள்ளப்படும் மோசமான ஊட்டச்சத்து, குறைந்த அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளுதல் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களாக கருதப்படுகிறது.

ஒரு ஆண்டுக்கு ஏழு மில்லியன் மக்களுக்கும் மேலாக உயிரிழக்க காரணமாக உள்ள மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுடன் உயர் இரத்த அழுத்தத்துக்கு தொடர்புள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கப்பல் மீது துப்பாக்கி சூடு.. உடனே கப்பல் அதிகாரி கொடுத்த எச்சரிக்கை.. வைரலாகும் ஆடியோ..!

ஆப்பிள், சாம்சங் கடும் எதிர்ப்பு எதிரொலி.. முக்கிய திட்டத்தை கைவிட்ட இந்திய அரசு..!

ஹார்முஸ் பிரச்சனையால் உலகம் முழுவதும் பாதிப்பு.. ஆனால் கேரளாவுக்கு மட்டும் லாபம்: சசிதரூர்

சமாதான பேச்சுவார்த்தை தோல்வி!.. சங்கீதா கேட்கும் செண்டில்மெண்டை கொடுக்க மறுக்கும் விஜய்?..

திடீர் அரசியல்வாதி சுந்தர்.சி!.. விஜயை அடுத்து சுந்தர்.சி-யை கலாய்த்த பிரகாஷ்ராஜ்..

அடுத்த கட்டுரையில்
Show comments