Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியாவில் கன மழை 14 பேர் உயிரிழப்பு - பல்லாயிரம் பேர் இடம்பெயர்வு

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (12:44 IST)
மலேசிய நாட்டில் வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. வார இறுதியில் மூன்று நாட்களாக பெய்த கன மழையால் 8 மாகாணங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

நகர, கிராமங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை வரை 51 ஆயிரம் பேர் தங்களது வீடுகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 
தலைநகர் கோலாலம்பூர், மக்கள் அடர்த்தி அதிகமுள்ள சிலாங்கூர் மாநிலத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
 
அரசின் தாமதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மக்களை அதிருப்திக்குளாக்கியுள்ளது. பல்லாயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
பலர் காணாமல் போயுள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை சித்ராவின் கணவர் விடுதலை.. மேல்முறையீடு செய்த தந்தை காமராஜ்..!

மிரட்டி பணம் பறித்த புகார்: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாப்பம்பாள் பாட்டி காலமானார்: மோடி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்!

இந்த ராசிக்காரர்களுக்கு பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் வந்து சேர்வார்கள்!– இன்றைய ராசி பலன்கள்(28.09.2024)!

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments