Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்க்கை வசதிகளில் சமரசம் செய்யாமல் புவி வெப்பமடைதலை தவிர்க்க முடியும்'

Webdunia
திங்கள், 14 ஏப்ரல் 2014 (07:17 IST)
உலக பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வழிகள் பற்றி தற்போது வெளிவந்துள்ள ஐநா அறிக்கையில், அதிகமாக கரிமத்தை சுற்றாடலில் வெளியிடக்கூடிய எரிசக்தி ஆதாரங்களில் இருந்து உலகம் வேகமாக விலகக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை வசதிகளில் சமரசம் செய்யாமலேயே பேரழிவைத் தரக்கூடிய புவி வெப்பமாதலை தவிர்க்க முடியும் என்று காலநிலை மாற்றம் குறித்த ஐநாவின் அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
 
பெட்ரோலிய எரிபொருளை பயன்படுத்தலை பாரிய அளவில் குறைப்பது தாக்குப்பிடிக்கக் கூடிய ஒன்றே என்று புதிய ஐநா அறிக்கை ஒன்று கூறுகிறது.
 
தூய்மையான, மீண்டும் பயன்படுத்தக் கூடிய ஆதாரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட எரிபொருளை நோக்கியும் மற்றும் எரிபொருள் வீணாதலை குறைக்கவும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது.
 
இதனால், சற்று தாமதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படுமே ஒழிய, பெரும் தியாகத்தை செய்ய வேண்டிய நிலை வராது என்றும் அக்குழு கூறியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments