Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெலாரூஸ் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரான்ஸ் தூதர்

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (10:58 IST)
பெலாரூஸ் நாட்டில் இருந்த பிரான்ஸ் தூதர் நிகோலஸ் டி லாகோஸ்டேவை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மின்ஸ்க் நகரில் இருந்து அவர் வெளியேறியுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

 
நிகோலஸ் டி லாகோஸ்டே பெலாரஸ் நாட்டை விட்டு ஞாயிற்றுக்கிழமையே வெளியேறிவிட்டதாக தூதரக செய்தித் தொடர்பாளர் ஏ.எஃப்.பி முகமையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
57 வயதான லாகோஸ்டே கடந்த ஆண்டு தான் அந்நாட்டில் தூதராக பணியமர்த்தப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்தல் வெளிப்படையாக நியாயமாக நடத்தப்பட்டது என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொள்ளவில்லை.
 
மேலும் பெலாரூஸின் அதிபராக இருக்கும் லூகஷென்கோவின் ஆட்சி மீது பல தடைகளும் விதிக்கப்பட்டது. நிகோலஸ் டி லாகோஸ்டே தன் விவரங்களை அதிபர் அலெக்சாண்டர் லூகஷென்கோவிடம் காண்பிக்க மறுத்ததாக உள்ளூர் ஊடகங்களில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments