Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் 79 அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

Webdunia
சனி, 21 பிப்ரவரி 2015 (15:28 IST)
துபாயிலுள்ள உலகின் மிக உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் ஒன்றில் தீப்பற்றியதை அடுத்து, ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர்.


 
துபாய் மரினாப் பகுதியிலுள்ள 'டார்ச் டவரின்' 50 ஆவது மாடியில் ஏற்பட்ட அந்தத் தீ, விரைவாக அந்தக் கட்டிடத்தின் பல பகுதிகளுக்கு பிரவியது என்று, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
 
எனினும் அந்தத் தீ, அவரச உதவிப் பணியாளர்களால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.
 
இந்தத் தீ விபத்து குறித்த காணொளிகளும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாயின. அதில் தீ மேல் நோக்கி பரவுவதும் கட்டிடத்தின் சிதிலங்கள் நிலத்தில் விழுவது தெரிகிறது.
 
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் மொத்தம் 79 மாடிகள் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக் குடியிருப்புப் பகுதி திறந்து வைக்கப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு 300 மீட்டர்களும் கூடுதலான உயரம் கொண்டது.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

Show comments