Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்தாத் மருத்துவமனையில் தீ விபத்து: 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2016 (16:54 IST)
பாக்தாத்தின் பெரிய மருத்துவமனை ஒன்றில் உள்ள மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால், குறைந்தது 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


 

 
இராக் தலைநகர் பாக்தாத்தின் மேற்கு பகுதியில் உள்ள யார்மூக் மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தினை மூன்று மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
இதுகுறித்து இராக் சுகாதார அமைச்சக பேச்சாளர் ஒருவர் கூறுகையில், தீ விபத்து ஏற்பட்டது குறித்த ஆரம்ப விசாரணைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட மின்சார பழுதே காரணம் என்று சுட்டிக்காட்டுவதாக தெரிவித்தார்.
 
சரியில்லாத பராமரிப்பு மற்றும் மோசமான மின்கம்பியிடல் பணிகள் ஆகியவற்றால் இராக்கில் மின்சார பழுதினால் ஏற்படும் தீ விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
 
மேலும், தீ விபத்துகளில் இருந்து தப்பிக்க மீட்பு வழிகளும் பல இடங்களில் இல்லாது இருப்பது ஆபத்தினை அதிகரிக்கிறது.

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments