Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில்: குறைந்தது 24 பேர் பலி

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2016 (22:06 IST)
குடியேறிகளை ஏற்றிக்கொண்டு கிரேக்கத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த படகொன்று கவிழ்ந்ததில், குறைந்தது இருபத்தி நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக கிரேக்கத்தின் கடலோர பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
 

 
துருக்கியிலிருந்து புறப்பட்ட இந்த படகு ஏகியன் கடற்பரப்பில் கவிழ்ந்ததாக தெரிவித்துள்ள அவர்கள், சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பலர் குழந்தைகள் எனவும் கூறியுள்ளனர்.
 
இந்த படகு கவிழ்ந்த சாமோஸ் தீவை ஒட்டிய கடற்பரப்பிலிருந்து பத்து பேர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும், மற்றவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த இரண்டு நாட்களில் அங்கு மூழ்கிய இரண்டாவது படகு இதுவாகும்.
 
கோஸ் தீவுக்கு அருகில் புதன்கிழமை மற்றொரு படகு மூழ்கியதில், இரு குந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments