Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எபோலா பரவியுள்ள லைபீரியாவில் சுகாதாரப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் தோல்வி

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2014 (15:05 IST)
லைபீரியாவில் எபோலா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பாடுபடும் மருத்துவ தாதிமாரும் உதவியாளர்களும் முன்னெடுத்த தேசிய மட்டத்திலான வேலைநி றுத்தப் போராட்டம் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளது.


 
பெரும்பாலான சுகாதாரப் பணியாளர்கள் வழமைபோல வேலைக்குத் திரும்பியதாக மொன்ரோவியாவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார்.
 
வேலைநிறுத்தப் போராட்டத்தை பொருட்படுத்த வேண்டாம் என்று மருத்துவப் பணியாளர்களுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக சுகாதாரப் பணியாளர்களின் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.
 
எபோலா நோயாளிகளை பராமரிக்கும் பணியாளர்களுக்கு கூடுதல் அபாயகால கொடுப்பனவும் பாதுகாப்புக் கருவிகளும் காப்புறுதியும் வழங்கவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
 
லைபீரியாவில் சுகாதாரப் பணியாளர்கள் 95 பேர் இபோலா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே உடன்பட்ட தொகையிலும் பார்க்க கூடுதலான அபாயகால கொடுப்பனவை கொடுப்பதற்கு வசதி இல்லை என்று அரசாங்கம் கூறுகின்றது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments