Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை தடை செய்யப்படும் - மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (18:36 IST)
இ-சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு நாட்டில் உடனடியாக தடை விதிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


 
நாகரீகம் மற்றும் ஸ்டைல் அடையாளமாக கருதப்படும் இ-சிகரெட் பயன்பட்டால் பள்ளி மாணவர்கள், இளைஞர்களின் உடல்நலன் பாதிக்கப்படுவதால் இந்த தடை விதிக்கப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
 
மாணவர்கள் இ-சிகரெட் பயன்படுத்துவது 77 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்த மத்திய அமைச்சர், இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை, விநியோகம், ஏற்றுமதி, இறக்குமதி, விளம்பரம் என இது தொடர்பான அனைத்து அம்சங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
 
இ-சிகரெட் பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்துள்ளார்.
 
பார்ப்பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கும் இ-சிகிரெட்டின் உள்ளே நிகோடின் திரவம் நிரப்பப்பட்ட குப்பி இருக்கும். இதைச் சூடுபடுத்தும் சிறு கருவியும் பேட்டரியும் இருக்கும்.


 
இளைஞர்கள் மற்றும் புகைப்பழக்கத்தில் இருந்து முழுமையாகf விடுபட முடியாதவர்கள் இ-சிகிரெட்டை பெரும்பாலும் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments