Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலிபன்கள் வலுவடைய தோஹா ஒப்பந்தம் உதவியது - அமெரிக்க பாதுகாப்புச் செயலர்

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (09:56 IST)
கடந்த பிப்ரவரி 2020-ல் தாலிபன்கள் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் தோஹாவில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் தான் ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்குலகப் படைகள் பின்வாங்கின. 

அந்த ஒப்பந்தம் ஆப்கன் படைகள் மற்றும் ஆப்கன் அரசின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதாக அமெரிக்க ராணுவ படைத் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் மெக்கென்ஸி கூறினார். இவர் தான் அமெரிக்க படைகள் ஆப்கனிலிருந்து பின்வாங்கும் நடவடிக்கையை மேற்பார்வை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதிபர் ஜோ பைடன் படைகளைக் குறைக்க ஏப்ரல் மாதத்தில் உத்தரவிட்டது, தீவிர விளைவுகளை ஏற்படுத்தியது என்றும் கூறினார். அதே போல தோஹா ஒப்பந்தம், தாலிபன் குழுவினர் வலுவடைய உதவியதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாய்ட் ஆஸ்டின் கூறினார்.
 
தோஹா ஒப்பந்தத்தின் படி, தாலிபன்கள் மீது அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக ஒப்புக் கொண்ட பின், தாலிபன்கள் ஆப்கன் அரசுப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை அதிகரிக்கத் தொடங்கியது என்றும், அதனால் ஒவ்வொரு வாரமும் ஆப்கன் தரப்பில் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டதாகவும் கூறினார். 
 
நேற்று (செப்டம்பர் 29, புதன்கிழமை) பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் குழுவின் கூட்டம் நடந்தது. அக்குழுவின் முன்னிலையில் இக்கருத்துகள் கூறப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments