Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைக்கார சிறுமியை துன்புறுத்தியதாக கிரிக்கெட் ஆட்டக்காரரின் மனைவி கைது

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (18:24 IST)
தங்கள் வீட்டில் பணிபுரிந்த சிறுமியை அடித்து சித்தரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த வங்கதேசத்தின் பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரர் ஷஹாதத் ஹுசைனின் மனைவியைக் கைது செய்திருப்பதாக வங்கதேசக் காவல்துறை அறிவித்திருக்கிறது.


 
 
கடந்த மாதத்தில் இவர்கள் வீட்டில் வீட்டு வேலைபார்த்த 11 வயது சிறுமி பலத்த காயங்களுடன் தெருவில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, கிரிக்கெட் ஆட்டக்காரர் ஷஹாதத் ஹுசைனும் அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார்கள்.
 
இந்த சிறுமி அவர்கள் வீட்டில் ஒரு ஆண்டு பணிபுரிந்திருக்கிறார்.
 
இன்னமும் கிரிக்கெட் ஆட்டக்காரர் பிடிபடவில்லை. ஆனால் அவரை தாம் கண்டிப்பாக பிடித்துவிடுவோம் என்று வங்கதேச காவல்துறை அறிவித்துள்ளது.


 

 
ஆனால் அவரது மனைவி ஜாஸ்மின் ஜஹான் வங்கதேசத்தலைநகர் டாகாவில் இருக்கும் அவரது பெற்றோர் வீட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments