Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ்: இலங்கையில் முடக்க நிலை அறிவிப்பு!!

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (13:58 IST)
இலங்கையை எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு முடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 
இதன்படி, இலங்கை முழுவதும் அமுலாகும் வகையில் இன்று மாலை (மார்ச் 20) 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 23) அதிகாலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்துவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
 
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையிலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 65 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கொரோனா தொற்று காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து நோயாளர்களும் அங்கொடை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments