Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோதி

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:00 IST)
தினத்தந்தி - கொரோனா நடவடிக்கையில் தமிழக அரசுக்கு பிரதமர் பாராட்டு
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார் என்கிறது தினத்தந்தியின் செய்தி.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவின் நிலைப்பாட்டில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முன்பு மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகமுள்ள மராட்டியம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் ஆகிய 7 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின் பேசிய பிரதமர் மோதி, "கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக மக்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் பங்கை நான் பெரிதும் பாராட்டுகிறேன். நாட்டிலுள்ள பிற மாநிலங்களுக்கும் தமிழ்நாடு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது." என தெரிவித்தார் என்கிறது தினத்தந்தியின் செய்தி.

தினமணி - வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 30 கடைசி தேதி

கடந்த 2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்ய கால அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் கணக்கு தாக்கல் செய்ய வருமான வரி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா் என்கிறது தினமணியின் செய்தி.

கடந்த 2018- 19-ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2019-ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கியது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது.

அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிகழாண்டில் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதற்கிடையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பா் வரை நீட்டிக்கப்பட்டது என்கிறது அச்செய்தி.

இந்து தமிழ் திசை - `ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்`

தமிழகத்தில் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை அக்டோபர்1-ம் தேதி முதல் அமல்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது என்கிறது இந்து தமிழ் திசையின் செய்தி.

மக்கள் நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு'திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டே இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்தஆண்டு தொடக்கத்தில் இத்திட்டத்தை அமல்படுத்துவதாக இருந்தது. கரோனா பாதிப்பு காரணமாக இலவச பொருட்கள் விநியோகம் நடந்ததால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திட்டத்தை வரும்அக்டோபர் 1-ம் தேதி முதல்செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடந்தது என்கிறது அச்செய்தி.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments