Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் பேருந்து விபத்தில் 38 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 20 ஜூலை 2014 (16:27 IST)
சீனாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு சீனாவில் அமைந்துள்ள ஹுனான் மாகாணத்தில், எரிபொருளை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம், நீண்ட தூரம் செல்லும் பேருந்தின் மீது மோதியதில் இந்த விபத்து நேரிட்டது.

சனிக்கிழமையன்று நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தின் பின்னால் இந்த லாரி மோதியதில், லாரி தீப்பிடித்து வெடித்தது என ஜின்ஸுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை மூன்று மணியளவில் ஹுகுன் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் ஐந்து வாகனங்கள் சிக்கிக்கொண்டன.

தீயணைப்பு வாகனங்கள் ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்தன. காயமடைந்த ஐந்து பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரித்துவருகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments