Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறைச்சி உணவில் புற்றுநோய் ஆபத்து: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2015 (18:54 IST)
சில வகை இறைச்சி உணவுகள் புற்றுநோய் வரும் அபாயத்தை அதிகரிக்கிறதா என்பது பற்றி எச்சரிக்கும் அறிக்கை ஒன்றை உலக சுகாதார நிறுவனம் இன்று வெளியிடுகிறது.


 

 
ஆட்டிறைச்சி மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி வகைகளும், பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவும் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறதா என்பது பற்றி தாம் நடத்தியிருந்த ஆய்வுகளின் முடிவுகளை உலக சுகாதார நிறுவனம் மீளாய்வு செய்து இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
 
பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளில் புற்றுநோய் வரும் ஆபத்து மிக அதிகமாக முதலாவது இடத்தில் உள்ளது என்றும், சிவப்பு இறைச்சிகளில் அது இரண்டாவது இடத்தில் உள்ளது என்றுமாக இந்த அறிக்கை முடிவுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்று வெள்ளியன்று தகவல் வெளியிட்டிருந்தது.
 
இந்த ஆய்வின் முடிவை இறைச்சி தொழில் நிறுவனங்கள் விமர்சித்துள்ளன. வெறும் கோட்பாடு அளவிலான ஆபத்துகளையும் இந்த ஆய்வு கணக்கில் சேர்த்துள்ளதாக அவை வாதிடுகின்றன.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Show comments