Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை: ராமநாதபுரத்தில் போராட்டம்

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2014 (20:12 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதையடுத்து, தண்டிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மீனவர்கள், பொதுமக்களில் ஒரு பகுதியினர் ராமநாதபுரம் பகுதியில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதனால், அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் மரங்களை வெட்டிப் போட்டும், கற்களைப் போட்டும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 
தீ வைக்கப்பட்ட பேருந்து

 
பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் சென்ற அரசுப் பேருந்து ஒன்று தங்கச்சி மடத்தில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குக் காவல் துறையினர் முயன்று வருகின்றனர்.
 
ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் தண்டவாளங்களையும் மறித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

Show comments