Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெல்ஜியம்: புத்தாண்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேக நபர்கள் கைது

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2015 (20:20 IST)
பிரஸ்ஸல்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது முக்கியச் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக நம்பப்படும் இரண்டு சந்தேக நபர்களை பெல்ஜிய காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.



 
 
கடந்த ஞாயிறு மற்றும் திங்களள் ஆகிய நாட்களில் இவர்களை பிடித்து, தடுத்து வைத்துள்ளதாக அரச வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், பயங்கரவாத செயல்களுக்காக ஆட்களை சேர்த்தது மற்றும் தாக்குதல்களுக்கு திட்டமிட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். பயங்கரவாத குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்றதாக மற்றொருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 
அவர்களின் வீடுகளில் சோதனைகளை மேற்கொண்ட காவல் துறையினர், இராணுவ உடை மற்றும் ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரப் பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் ஆயுதங்களையோ வெடிப்பொருட்களையோ கண்டுபிடிக்கவில்லை. பாரிஸ் தாக்குதல்களுடன் இந்த விசாரணைகளுக்கு தொடர்பு இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments