Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெல்ஜியம்: புத்தாண்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேக நபர்கள் கைது

பெல்ஜியம்: புத்தாண்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேக நபர்கள் கைது
, செவ்வாய், 29 டிசம்பர் 2015 (20:20 IST)
பிரஸ்ஸல்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது முக்கியச் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக நம்பப்படும் இரண்டு சந்தேக நபர்களை பெல்ஜிய காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.



 
 
கடந்த ஞாயிறு மற்றும் திங்களள் ஆகிய நாட்களில் இவர்களை பிடித்து, தடுத்து வைத்துள்ளதாக அரச வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், பயங்கரவாத செயல்களுக்காக ஆட்களை சேர்த்தது மற்றும் தாக்குதல்களுக்கு திட்டமிட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். பயங்கரவாத குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்றதாக மற்றொருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 
அவர்களின் வீடுகளில் சோதனைகளை மேற்கொண்ட காவல் துறையினர், இராணுவ உடை மற்றும் ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரப் பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் ஆயுதங்களையோ வெடிப்பொருட்களையோ கண்டுபிடிக்கவில்லை. பாரிஸ் தாக்குதல்களுடன் இந்த விசாரணைகளுக்கு தொடர்பு இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil