Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசா: பிரிட்டனின் முதல் முஸ்லிம் பெண் அமைச்சர் வார்சி பதவி விலகினார்

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2014 (11:32 IST)
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர், சயீதா வார்சி, காசா தாக்குதல் பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாடு தொடர்பாக பதவி விலகியுள்ளார்.

காசா பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு "தார்மீக ரீதியில் நியாயப்படுத்த முடியாதது" என்று அவர் கூறியிருக்கிறார்.

தான் வருத்தத்துடனே பதவி விலகுவதாகவும், ஆனால்,காசா குறித்த அரசின் தற்போதைய கொள்கை, பிரிட்டனின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாகத் தான் நம்புவதாகவும், வார்சி, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கிறார்.

வார்சி அம்மையார்தான் , பிரிட்டிஷ் அமைச்சரவை ஒன்றில் பதவிக்கு வந்த முதல் முஸ்லிம் பெண்மணியாவார்.

அவரது பதவி விலகல் குறித்து வருத்தம் தெரிவித்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன், தனது அரசு காசாவில் தற்போதைய நிலைமை சகித்துக்கொள்ள முடியாததாகவே இருப்பதாகவும், இரு தரப்புகளும் உடனடியாக நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு உடன்படவேண்டும் என்றுமே கூறிவருவதாகவும் கூறினார்.

காசாவின் மீது இஸ்ரேலியக் குண்டுத்தாக்குதல் பற்றி போதிய அளவு கடுமையாக கேமரன் கண்டனத்தைத் தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சியினரும், அவரது கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் விமர்சித்து வருகிறார்கள் என்று பிபிசியின் அரசியல் விவகாரச் செய்தியாளர் கூறுகிறார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments