Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூட்டல் கணக்கு தெரியாத மாப்பிள்ளையை நிராகரித்த மணப்பெண்

கூட்டல் கணக்கு தெரியாத மாப்பிள்ளையை நிராகரித்த மணப்பெண்
, வெள்ளி, 13 மார்ச் 2015 (19:04 IST)
திருமணத்துக்கு வந்த மாப்பிள்ளையிடம், 15 உடன் 6ஐ கூட்டினால் என்ன வரும் என்று அந்தப் பெண் கேட்டுள்ளார்.
 
அதற்கு விடை, 16 என்று மாப்பிள்ளை தவறாகப் பதில் சொல்லவே, அவருக்கு படிப்பு போதாது என்று சொல்லி அந்தப் பெண் திருமணத்தை நிறுத்திவிட்டார்.
 
உத்தரப் பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்த போலீசார், திருமணத்துக்கு வந்த பரிசுப் பொருட்கள் மற்றும் நகைகளை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தாம் உதவியதாக கூறியுள்ளனர்.
 
கடந்த மாதம், தனக்கு மாப்பிள்ளையாக வரவிருந்தவருக்கு வலிப்பு நோய் இருந்தும், அதனை அவரது வீட்டார் மறைத்துவிட்ட காரணத்துக்காக ஒரு மணப்பெண் அந்த திருமணத்தை நிறுத்திவிட்ட செய்தி, இந்திய ஊடகங்களில் பெரும் இடத்தைப் பிடித்திருந்தது.
 
மாப்பிள்ளையின் உடல் சுகவீனம் குறித்த தகவலை தனக்கு மாப்பிள்ளை வீட்டார் மறைத்ததால் அந்த பெண் கோபமடைந்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil