Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேவெதர் ஜூனியர்-மேனி பெக்கெஷியோ இடையே குத்துச்சண்டை அறிவிப்பு

Webdunia
சனி, 21 பிப்ரவரி 2015 (20:01 IST)
மிக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் குத்துச்சண்டை போட்டி ஒன்று வரும் மே மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வீரர் ஃப்ளாயிட் மேவெதர் ஜூனியர் தனக்கும், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மேனி பெக்கெஷியோவுக்கும் இடையேயான போட்டி லாஸ் வேகஸ் நகரில் இந்த ஆண்டு மே மாதம் இரண்டாம் வாரம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
 
வெல்டர்வெயிட் பிரிவில் இவ்விருவருக்கும் இடையேயான போட்டி கடந்த ஐந்து ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்டு வந்தது.
 
நீண்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து இது தொடர்பிலான ஒப்பந்தமும் இப்போது ஏற்பட்டுள்ளது. அதேபோல போட்டி ஒளிபரப்பு குறித்தும் இரண்டு அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தப் போட்டி இதுவரை இல்லாத வகையில் வசூலில் சாதனை படைக்கும் என்று கணிக்கப்படுகிறது. அவ்வகையில் இப்போட்டி 250 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.
 
போட்டியாளர்கள் இருவரும் சமவலிமை கொண்டவர்கள், அவர்கள் மீது கட்டப்படும் பணமும் பெறுமதி வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
 
எனினும் இருவரும் தமது திறமையின் உச்சத்தை கடந்துவிட்டனர் என்றும், இந்தப் போட்டி பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments