Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை நபர் அகதியாக பதிவு செய்ய முயற்சி - காவல்துறை விசாரணை

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (22:53 IST)
இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த தினேஷ்காந்தன் என்ற நபர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தான் படகு மூலமாக தமிழகத்திற்கு அகதியாக வந்ததாக கூறி தனுஷ்கோடி கடற்கரையில் நின்றுள்ளார்.
 
தனுஷ்கோடி பகுதி மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அவரை மீட்ட கடல்சார் காவல்துறை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
 
காவல்துறை நடத்திய விசாரணையில், நேற்று காலை கொழும்பிலிருந்து விமானம் மூலமாக சென்னை வந்து பின்னர் அங்கிருந்து பேருந்து மூலமாக ராமேஸ்வரம் வந்து தனுஷ்கோடி கடற்கரைக்கு சென்றுள்ளார்.
 
படகில் வந்ததாக தெரிவித்தால் தன்னை அகதியாக மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைப்பார்கள் என அவர் முயற்சி செய்தது தெரியவந்தது.
 
இதனையடுத்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தினேஷ்காந்தனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.67,000ஐ தாண்டிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்வு..!

சொத்துவரி செலுத்த இன்று கடைசி தினம்.. நாளை முதல் தனிவட்டி அபராதம்: சென்னை மாநகராட்சி..!

செங்கோட்டையனுக்கு Y கொடுத்தால் ஈபிஎஸ்-க்கு Z+ கொடுக்க வேண்டும்: வைகைச்செல்வன்

இன்று ரம்ஜான் விடுமுறை இல்லை: வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments