Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வியட்நாமில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 3 லட்ச ஆணுறைகளை சுத்தம் செய்து மீண்டும் விற்க முயற்சி

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (09:45 IST)
வியட்நாமில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 3 லட்ச ஆணுறைகளை சுத்தம் செய்து மீண்டும் விற்க முயற்சி

வியட்நாமில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சுமார் 3,20,000 ஆணுறைகளை சட்ட விரோதமாக விற்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது.

இந்த ஆணுறைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அந்நாட்டு போலீஸார் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் சுத்தம் செய்யப்பட்டு, பழைய வடிவத்திற்கு கொண்டுவந்து மீண்டும் புதிதான ஒன்று போல பேக் செய்யப்பட்டு அவற்றை விற்பனை செய்ய இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியான காணொளியில் வியட்நாமின் வட பின் டுஆங் மாகாணத்தில் உள்ள ஒரு கிடங்கில் நடந்த சோதனையில் 360 கிலோ எடை கொண்ட பல பைகளில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் இருந்தன.

இந்த கிடங்கிற்கு உரிமையாளர் என நம்பப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கிலோ ஆணுறைகளுக்கு 0.17 டாலர்கள் கொடுக்கப்பட்டதாக கைது செய்யப்பட்ட பெண் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது போன்ற பயன்படுத்தப்பட்ட எத்தனை ஆணுறைகள் ஏற்கனவே சந்தையில் விற்கப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரிய வரவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments