Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 60 பேர் பலி

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (12:36 IST)
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள புர்கினா பாசோவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், தற்காலிக தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த வெடி விபத்திற்கு முக்கிய காரணமாக அங்கு வைத்திருந்த வெடிபொருள் இருந்ததுதாகவும், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்ததாகவும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக உள்ளூர் அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியபோது இந்த வெடி விபத்து, அருகே இருந்த மரங்கள் வீடுகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் அளவிற்கு மிக பயங்கரமாக இருந்ததாக குறிப்பிட்டனர்.

புர்கினா பாசோ ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர்களில் ஒன்று.

இந்த நாட்டில் உள்ள பல சுரங்கங்கள் சர்வதேச நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அனுமதி பெறாத சுரங்கங்களும் இங்கு அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments