Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 60 பேர் பலி

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (12:36 IST)
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள புர்கினா பாசோவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், தற்காலிக தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த வெடி விபத்திற்கு முக்கிய காரணமாக அங்கு வைத்திருந்த வெடிபொருள் இருந்ததுதாகவும், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்ததாகவும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக உள்ளூர் அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியபோது இந்த வெடி விபத்து, அருகே இருந்த மரங்கள் வீடுகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் அளவிற்கு மிக பயங்கரமாக இருந்ததாக குறிப்பிட்டனர்.

புர்கினா பாசோ ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர்களில் ஒன்று.

இந்த நாட்டில் உள்ள பல சுரங்கங்கள் சர்வதேச நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அனுமதி பெறாத சுரங்கங்களும் இங்கு அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments