Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவின் ஏவுகணை சோதனை: அமெரிக்காவின் உயர் ஜெனரல் வேதனை!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (15:00 IST)
சீனா ஹைபர் சோனிக் ஏவுகணையை சோதித்து பார்த்துள்ளது என்பது ஸ்புட்னிக் தருணத்தை நினைவுப்படுத்துவதாக தெரிகிறது என்று அமெரிக்க உயர் ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ளார். 

 
இதுதான் பனிப்போரின் ஆயுத போட்டிக்கான காரணமாகவும் அமைந்தது. ப்ளூம்பெர்க் ஊடகத்திடம் பேசிய ஜெனரல் மார்க் மிலி, சீனாவின் ராணுவம் வேகமாக விரிவடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
 
இம்மாத தொடக்கத்தில் சீனாவின் ஏவுகணை சோதனை அமெரிக்க ராணுவத்தை ஆச்சர்யப்படுத்தியுள்ளதாக ஃபினான்ஷியல் டைம்ஸ் தெரிவித்திருந்தது. ஆனால் தாங்கள் எந்த ஏவுகணை சோதனையையும் நடத்தவில்லை, அது விண்கலப் பரிசோதனை என்றே சீனா தெரிவித்துள்ளது.
 
“இந்த ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனை கவலையளிக்கும் ஒன்று. இது ஸ்புட்நிக் தருணத்தை போன்று உள்ளது. நாங்கள் இதை கவனித்து வருகிறோம்.” என மார்க் மிலி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments