Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா - சீனா இடையே வலுக்கும் ’வர்த்தக போர்’

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (13:09 IST)
அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் பன்றி இறைச்சி, ஒயின் உட்பட பல பொருட்களுக்கு வரி விதித்துள்ள சீனாவை வெள்ளை மாளிகை கண்டித்துள்ளது.
 
மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ஆகும் எஃகு மற்றும் அலுமனியம் ஆகியவற்றுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியதை தொடர்ந்து சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் 128 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதித்துள்ளது.
 
அமெரிக்காவால் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்புகளில் ஏற்படும் இழப்புகளை சரி செய்வதற்கான முயற்சி இது என சீனா தெரிவித்துள்ளது.

 
இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவுகள் ஏற்பட்டன. "சர்வதேச சந்தையை சீனா சீர்குலைப்பதாக" சீனா மீது வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.
 
சீனாவின் மானிய விலைகள் மற்றும் அதிக உற்பத்தி ஆகியவைதான் எஃகு நெருக்கடிக்கு காரணம் என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் லிண்ட்ஸே வார்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
 
முறையாக நடைபெறும் அமெரிக்க இறக்குமதிகள் மீது கவனம் செலுத்துவதை விடுத்து, சர்வதேச சந்தையை சீர்குலைக்கும், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு கெடுதல் விளைவிக்கும் முறையற்ற சீன வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இருதரப்பிலும் மேற்கொள்ளபடும் நடவடிக்கைகள், சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் விரிசல்களை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் சீனாவை "பொருளாதார எதிரி" என டிரம்ப் விவரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments