Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோமாலியா வான் தாக்குதலில் பொதுமக்கள் பலி: மன்னிப்பு கோரிய அமெரிக்க ராணுவம்!

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (14:07 IST)
கடந்த பிப்ரவரி மாதம் சோமாலியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பொதுமக்கள் சிலர் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
 
இந்த தாக்குதலின்போது இருவர் உயிரிழந்ததாகவும், மூன்று பேர் படுகாயம் அடைந்ததாகவும் அமெரிக்காவின் ஆஃப்ரிக்க படை தளபதி திங்கள்கிழமை அன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அல் ஷபாப் என்னும் இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
 
இந்த தாக்குதலில் வாழைப்பழ விவசாயி ஒருவரும், தகவல் தொடர்பு சேவைகளில் பணியாற்றும் ஒருவரும் உயிரிழந்ததாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது.
 
''சோமாலியா நாட்டு மக்கள் மீது எங்களுக்கு நிறைய மதிப்பு உள்ளது, நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம் என அமெரிக்காவின் ஆஃப்ரிக்க படை தளபதி ஜென் ஸ்டிஃபன் தெரிவித்துள்ளார்.
 
மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா எவ்வாறு அவ்வப்போது பொது மக்கள் தாக்கப்பட்டது குறித்தும் உயிரிழப்பு குறித்தும் அறிவிக்கிறதோ, அதேபோல ஒவ்வொரு அரை ஆண்டிற்கும் இனி அமெரிக்க ஆஃப்ரிக்க படைகளும் பொது மக்கள் உயிரிழப்புகள் குறித்து அறிக்கை வெளியிடும் எனவும் ஜென் ஸ்டிஃபன் கூறினார்.
 
ஆனால் சோமாலியாவில் நடந்த தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், உண்மையான பலி எண்ணிக்கையை அமெரிக்கா மறைக்கிறது என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு குற்றம்சாட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments